Tuesday, December 27, 2011

ஆதியும் மாகி...



அணுவின் கூறுகள்
ஒவ்வொரு அணுவினுள்ளும் மூன்று வகையான அணுக்கூறுகள் உள்ளன. அவையாவன:
  1. நேர்மின்னி அல்லது புரோட்டான்
  2. எதிர்மின்னி அல்லது எலக்டிரான்
  3. நொதுமின்னி அல்லது நியூட்ரான்
இவற்றில் நேர்மின்னியும் நொதுமின்னியும் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கும். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் (உண்மையில் இந்த மாதிரி முழுக்க உண்மை இல்லையாயினும் இதுவே பொதுவாக பயன்படுத்தப்படும் எளிமைப்படுத்தப்பட்ட மாதிரியாகும். மிகச்சரியான ஓர் மாதிரி குவாண்டம் பொறிமுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.).
இதில் எலக்ட்ரானும், ப்ரோட்டானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம அளவில் இருப்பதால் இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது.                                          நன்றி:- விக்கிபீடியா.

என்னடா அடுத்தபதிவில் ஏதோ சொல்லபோரான்னு பார்த்தா அணு கூறை பத்தி எழுதிகிட்டு இருக்கானேன்னு யோசனையா?

ஆதியில் இருந்து பதிவில் அந்த கதை எனக்கு சொன்னது என் பாட்டியும் என் பெற்றோர் என்று  சொன்னேன். நினைவிருக்கிறதா? அதற்கான பதில் இந்த பதிவில் கிடைக்கும்.

மேலே நான் கூறிய அணுவின் கூறு படித்தால் எப்படி இருக்கு ? புரியுதா? அறிவியலில் பல பிரிவுகள் இருந்தாலும் அந்த குவாண்டம் பொறிமுறையில் படித்தவர்களுக்கு தான் இதை பற்றி எல்லாம் முழுதாய் தெரியுமாம்?!

என் பாட்டி முன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.அவர் இப்பொழுது உயிருடன் இல்லை அவர் இறக்கும் பொழுது அவர் வயது சுமாராக 118 (12  வருடங்களுக்கு முன் )இருக்கும். எதற்காக அவர் வயது இப்பொழுது? சும்மா அவர் படித்தது எப்பொழுது  என்று உங்கள் யூகத்துக்கு தான்.

இன்று நாம் படித்த படிக்கும் அறிவியல் எல்லாம் என்றோ நமக்கு கதைகளாய் சொல்லிச் சென்றிருகிறார்கள் நம் முன்னோர். மிக எளிமையாக ஒரு முறை கேட்டாலே நினைவில் கொள்ளும் அளவில். எவ்வளவு அனுபவம் இருந்தால் அறிவியலை கதையாய் சொல்ல முடியும்? அதுவும் பிழை இன்றி. அந்த கதையில் என்ன அறிவியல் இருக்க போகிறது? அவர்கள் சொல்லிச் சென்ற அறிவியலின் ஆழம் அளவிட முடியாதது.என்னால் விளக்க முடிந்த அளவிற்கு எடுத்து சொல்கிறேன்.  

புரோட்டான், நியூட்ரான்,எலக்டிரான், - என்ன இவை தான் பிரம்மா, விஷ்ணு, சிவன்னு சொல்லபோரேன்னு பாக்கறீங்களா? சிவனை தவிர மத்த இரண்டுபேரும் இதில் இருக்காங்க அப்பறம் இன்னொருவர் யார் ? யோசிங்க.கடைசியா பார்போம். 

அது வரை கதை படியே மத்த இரண்டுபேரை பத்தி பார்ப்போம்.

அணுவின் உள்ளே -

புரோட்டான் (positively charged )- விஷ்ணு -  
நியூட்ரான்(electrically neutral ) - பிரம்மா - 

அந்த கதை படி அந்த நிகழ்வின் பொது தான் இந்த பிரபஞ்சம் உருவானது என்று சொல்வார்கள். அதையும் தான் பார்ப்போமே. 

விஷ்ணுவும் பிரம்மாவுக்கும் இடையே சண்டை யார் பெரியவர் என்று. சக்தியாய் சிவன் அவர்கள் இருவரின் நடுவே ஜோதி பிழம்பாய்.விஷ்ணு அடியை தேடி செல்ல, பிரம்மா முடியை தேடி செல்ல.. அறிவியல் பெயர் வைத்து பாருங்கள். அறிவியலில் என்ன நிகழ்வு அது? அணு பிளவோ?!  (அறிவியலில் அது தனி பிரிவு ஏதோ nuclear  science ஆம் ஏதோ சொல்றாங்க அது எதுக்கு நமக்கு. நமக்கு தான் அறிவியல் படிச்சாலே தூக்கம் வந்திருமே நாம கதையை  பார்ப்போம் )
ஏன் பிரம்மாவும் விஷ்ணுவும் அவதாரம்  எடுத்து தேடனும் ? உள்ளபடியே  தேட வேண்டியது தான? பிறகு எதற்கு அவதாரம்? அதுக்கு வேற அறிவியலில் என்னென்னமோ சொல்றாங்க ப்ரோடோனும் நியூட்ரான்நும் பிரிஞ்ச என்ன்னேமோ ஆகுதுன்னு விடுங்க அறிவியலில் ரொம்ப ஆழமா போக வேண்டாம்.  
அப்ப கதையில் வரும் தாலம்பூ? - (ஹானி வூர்வேர்ப் ஏதோ சொல்றாங்க.மேலே உள்ள படத்தை பாருங்களேன்) 
அணுவை எப்படி பிளப்பது?(nuclear fission )
அணுவை பிளந்தால் என்ன நடக்கும்? அதை பற்றி நன்றாய் அறிந்தவர்கள் என்ன எல்லாம் நடக்கும் கூறுங்களேன். அதுவும் இந்த கதையில் உள்ளதும் ஒத்து போகிறதா பாருங்களேன்.
நான் இதை முழுவதுமாக விளக்கிக்கொண்டு இருந்தால் இந்த பதிவை இப்பொழுது பதிய  முடியாது. வேறு சந்தர்பத்தில் முடிந்தால் விளக்குகிறேன் இல்லை உங்களுக்கு கேள்விகள் இருப்பின் கேளுங்கள் பதில் அளிக்கிறேன். முழு அறிவியலையும் இந்த பதிவில் வெளியிடுவது சாத்தியம் அல்ல. ஆகையால் உங்கள் தேடலையும், பார்வையையும் சீர் தூக்கும் ஒரு சிறு பதிவு தான் இது.         

எளிமைய தெரிஞ்சிக்க 
"சின்ன பையன்" கேள்வி பட்டது உண்டா? அது தாங்க little  பாய் -   ஜப்பான் (ஹிரோஷிமா, நாகசாகி) சும்மா சின்ன பையனின் விளைவே எப்படி இருக்கு நாம் பார்த்துகொண்டு இருக்கிறோம். பிறகு இந்த பிரபஞ்சம் உருவாகும் போது எப்படி இருந்திருக்கும்?. 

மிக சரியாக மிக துல்லியமாக அறிவியலில் இன்னும் கண்டு பிடிக்க படாத நிறைய விசயங்கள் நமது கதைகளில் உண்டு.அவை அனைத்தும் கதைகள் மட்டும் அல்ல மிக ஆழமான அறிவியல்.     

என்ன தலை சுத்துதா? எவ்வளவு பெரிய விசயத்தை எத்தனை எளிமையாக, அனைவருக்கும் புரியும் படி சொல்லி சென்று இருக்கிறார்கள். இன்னும் உங்களால் நம்ப முடியவில்லையா?

அப்போ அந்த முன்றாவது - எலக்டிரான் யார்?(ன்னு).   பதில் சொல்லிறவேண்டியதுதான். யார் அது அவர் பேரை சுலபமா சொல்லுவாங்க. திரிலோக சன்ஜாரின்னு -  அட நாராயணா ... அவரே தான் நம்ம நாரதர்.     

இவர் பிரம்மனின் மகன் என்று சொல்வார்கள் ஆனால் எப்பொழுதும் நாராயணா நாராயணா தான்..  

எலக்டிரான் என்ன செய்யும்- புரோட்டான்,நியூட்ரானை சுத்திக்கிட்டே இருக்கும். அப்ப இன்னொரு  லோகம்?  புரோட்டான்,நியூட்ரான் எதுக்குள்ள இருக்கு? 3  லோகம் ஆச்சா?

நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம். ஒரு நாள் அவர் கலகம் பண்ணாட்டி அவர் மண்டை வேடுச்சிருமாம். விளக்கம் தேவையா? அறிவியல் பயின்றவர்கள் யாவரும் அறிந்ததே.   

கதை மட்டும் அல்ல. இன்னும் நிறைய உண்டு.  

நம் கதைகளில் சொல்லப்படும் கடவுள்களை பற்றி ஏளனம் செய்யும் பிற மதத்தவரும், பகுத்தறிவு பேசித்திரியும் பன்னாடைகளும். இந்த கடவுள் ஏன் இப்படி இருக்கு, இந்த கடவுள் யாருக்கு பிறந்தவன், எப்படி பொறந்தான் இப்படி நிறைய பேசுவார்கள் அதன் ஆழம் தெரியாமல். அறிவியலில் 2 hydrogen நும் ஒரு oxygen நும் சேர்ந்தால் H2O வாம் அது தான் தண்ணியாம். எப்படி இந்த சேர்க்கை நடந்துச்சு? இதை எல்லாம் கேள்வி கேட்கலாமே. அதை பற்றி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கலாமே.  

இதையெல்லாம் சாதாரண பாமரனுக்கு எப்படி புரியவைப்பது?

பகுத்தறிவு பேசுபவர்கள் ஏன் ஒரு அணு உலையின் உள் செல்லக்கூடாது? பகுத்தறிவு வாதி (வியாதி) தானே. கடவுள் இல்லைன்னு சொன்னா அவன் பகுத்தறிவு மேதாவியாம். அவர்கள் எல்லாம் போலாமே. செய்வார்களா?   
சிவா லிங்கத்தை கேலி பேசுபவர்கள் இதை ஏன் செய்யகூடாது அணு உலை லிங்க வடவமின்றி வேறு வடிவத்தில் அமைக்கலாமே.  செய்வார்களா? மிக சாதாரண விசயம் சிவனை படத்தில் பார்பதற்கும், லிங்கமாய் வழிபடுவதையும் கூட ஏன் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள். 


லிங்க வடிவம் அந்த ஒரு வடிவம் மட்டும் தான் முழு சக்தியை உள்நிருத்தும் ஆற்றல் பெற்றது. வேறு எந்த வடிவத்தை விடவும் லிங்கவடிவில் சக்தியை உள்நிருத்தும் ஆற்றல் அதிகம். லிங்க வடிவத்தை உணராதவர்களுக்கு நல்ல எடுத்துகாட்டு அணு உலைகள் வடிவம். 


மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் படி அனுபவபூர்வமாக   சொன்னவைகள் தான் இந்த கதைகள். கதைகள் மட்டும் அல்ல. நமது முன்னோர்கள் செய்து வைத்து சென்றவை யாரும் கற்பனை கூட பண்ண முடியாத விசயங்கள். உதாரணமா  சிலவற்றை மட்டும் பார்போம்.

சனாதன தர்மத்தில் கோவில்கள், சிலை வடிவங்கள், வழிபடும் முறை, படைப்பவை அனைத்தும் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள் அல்ல. 

அறிவியல் ஆய்வு கூடத்தில் கண்டிருப்பீர்கள் நிறைய சாதனங்கள், கண்ணாடி குடுவைகள், இன்னும் நிறைய. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் ஏன்? ஆய்வு கூடத்தை பற்றி தெரியாதவன் அறிவியல் பற்றி அறியாதவனுக்கு burette ,pipete ,conical flask etc . ன்னு சொன்னா என்ன புரியும்?      அதுவே சனாதன தர்மம் பற்றி அறியாதவர்கள் செய்வது.

ஆகம விதிப்படி அமைய பெற்ற நமது கோயில்கள் எல்லாம் ஆய்வு கூடங்கள் மட்டும் அல்ல அவைகள் சக்தி கேந்திரங்கள். யார் உள் சென்று அதன் முறைப்படி முழு மனதுடன் வழிபடினும் அவர்கள் அனைவரும் (விஞ்ஞானம் அல்ல)  மெய்ஞானத்தை உணர்வது  நிச்சயம். நம் முன்னோர் அறிவியல் சொன்னது மட்டும் அல்ல நமக்காக செய்து வைத்திருகிறார்கள்.

இன்று நமது கோயில்களின் மகத்துவம் தெரியாமல் ஏதோ கோயிலுக்கு செல்கிறோம் வருகிறோம். இதில் மற்ற மதத்தவர் வேறு, கோயில்கள் அற்ற சிலைகள் அற்ற இந்தியாவை ஆக்குவார்கலாம். 
அய்யா புண்ணியவான்களே! கொஞ்சம் இதயம் இருந்தால், கொஞ்சம் அறிவு இருந்தால் மனிதம் என்று ஒன்று இருந்தால். மதத்தை விடுங்கள், அது யாருடையதோ விடுங்கள், கீழே உள்ளதை மட்டும் சற்று எண்ணி பாருங்கள் ஒரே ஒரு எடுத்துகாட்டை தருகிறேன்.

மதுரை மீனாச்சி அம்மன் கோயில் கேள்விபட்டது உண்டா? ஏதோ கோயில் அது மட்டும் தான் தெரியும். அதன் மகத்துவம் எதுவும் தெரிய வேண்டாம். அது கட்ட தொடங்கியது முடித்து எப்பொழுது தெரியுமா? அதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?  

ஆரம்பித்தது 1216 -  1878 எத்தனை வருடங்கள்?
அந்த கோயில் கட்ட திட்டமிடவனுக்கு, அந்த சிற்பக்கலை செய்தவருக்கு, அரசனுக்கு, அப்பொழுது அங்கு வாழ்ந்த மக்களுக்கு அனைவருக்கும் நன்றாய் தெரியும் அந்த கோயில் கட்டுமானம் முடிக்கும் பொது அதை பார்க்க தாங்கள் மட்டும் அல்ல தன் அடுத்த சந்ததியால் கூட முடியாது என்று. அப்படி இருக்க அதை எப்படி திட்டமிட்டு முடித்திருப்பார்கள். ஒரு வருட இரண்டு  வருட திட்டமிடல் இல்லை.அதற்கான தடை படாத பொருள் உதவி, தொடர்ந்து அதை செய்து முடிக்க ஆட்கள், படையெடுப்புக்கள், இயற்கை சீற்றங்கள் இப்படி எத்தனை காரணிகளை கடந்து எத்தனை தலைமுறை கடந்து அந்த கோயில் இன்று நமக்கு வழங்க பட்டிருக்கும். யாருடைய பெயருக்காகவோ, புகழுக்காகவோ  இன்றி அதில் ஏதோ ஒரு ஆழ்ந்த பயன் கருதி செய்யப்பட்டது. அதை கூட புரிந்து கொள்ள முடியாமல் மதம் என்ற பெயரால் மதி கெட்டு பேசும் இவர்களால் இந்த சமூகத்திற்கோ, நாட்டுக்கோ, மக்களுக்கோ என்ன நல்லது செய்து விட முடியும்?. 

நான் இங்கு சொன்னது ஒரே ஒரு கோயிலை பற்றி மட்டும் இப்படி நிறைய கோயில்கள் உண்டு. ஒவ்வொரு முறை அதை காணும் போதும் மனிதத்துடன் பார்த்தல் அதன் உண்மை புரியும்.   


(உலக அதிசயங்கள் பட்டியல் வாக்கெடுப்பில் - மதுரை மீனாச்சி அம்மன் கோயிலும் இடம் பெற்று இருந்தது. அதற்கு வாக்களிக்க கூட நம்முள் பலருக்கு நேரமில்லை, முடியவில்லை வேதனையான வருந்தத்தக்க விசயம். உலக அதிசயங்கள் பட்டியலில் அதன் தேர்வு அவசியம் இல்லை தான். இருந்தும் அந்த கோயிலின் சிறப்பு பற்றி அறியாமல்... என்ன சொல்வது?? :((.. வார்த்தை வரவில்லை)   

"கோவில் இல்லா ஊரில் குடி இருக்காதே"  என்று சொல்வார்கள். நீங்கள் மெய்ஞானம் அடைய எதுவுமே செய்ய தேவை இல்லை. அந்த சக்தி கேந்திரத்தின் ஆற்றல் உங்களுள் அதை நிகழச் செய்யும். 

இந்த பதிவு இன்னும் முடியவில்லை தொடர்வோம் நம் தேடலில்.       

பதிவின் நீளம் கருதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆய்வு முடிவு பற்றி அடுத்த பதிவில் தொடர்வோம்.மன்னிக்கவும். அதுவரை அவரின் முடிவு E =MC2(sq ) என்றால் என்ன என்று நினைவில் கொள்ளுங்கள்.   

மறுபிறப்பு கோட்பாடு நிரூபிக்க முடியுமா? நிறைய பேர் கேட்கிறார்கள்.  ஐன்ஸ்டீன் கூட சேர்த்து அதையும் நிருபிச்சிருவோம்.   

நண்பர்களே! உங்கள் தேடலையும், பார்வையையும் சீர் தூக்கும் ஒரு சிறு பதிவு தான் இது.  எந்த ஒரு முடிவையும் எடுக்க அவசியம் இல்லை. உங்களுள் தேடல் இருக்கட்டும் மேலும் தொடர்வோம்...          



டிஸ்கி :- 
அப்போ அணுவை தான் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடுகிறார்களா? மேதாவிகளுக்கு பதில் -  உங்கள் உடம்பு என்று சொல்வதில் -  கோடான கோடி அணுக்கள் உள்ளது. அதில் ஒரு அணுவை பற்றி மட்டும் பேசினால் அந்த ஒரு அணு மட்டும் தான் நீங்களா?! காத்திருங்கள்... தொடர்வோம்  





Thursday, December 22, 2011

ஆதியை நோக்கி...



பிரம்மா ஏன் அண்ண வடிவெடுத்து மேல் நோக்கியும், விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கீழ் நோக்கியும் செல்லவேண்டும்?

பிரம்மா கல்வியின் அதிபதி - கல்வி/அறிவு எப்பொழுதும் மேல் நோக்கி செல்பவை. எளிமையாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் சிந்திக்க உங்கள் எண்ணம் எல்லாம் மேல் நோக்கி செல்லும். நமது மூளைக்கு (தலையை நோக்கி) செல்லும்.

எதற்காக அன்னப்பறவை வடிவும் ? -  அன்னத்தின் சிறப்பு பாலும் நீரும் கலந்து இருந்தாலும் பால்-ஐ மட்டும் தனியாக பிரித்து உண்ணும் ஆற்றல் பெற்றது.

நம்மிடம் உள்ள அறிவு என்பது நல்லது தீது என பிரித்து - பகுத்தறியும் அறிவு மட்டுமே . நம் அறிவு இதுவரை நாம் சேர்த்து வைத்து இருப்பது எல்லாம் நம் ஐம்புலன்களால் சேர்த்தவை.  நம் ஐம்புலன்கள் செய்வது எல்லாம் ஒப்பிட்டு நமக்கு சொல்வது மட்டுமே.இப்படி தான் நாம் அறிவை சேர்கிறோம். (இதை படிக்கும் பொது கூட கருத்து  சரியா தவறா என்று நம் எண்ணம் நமது பழைய அறிவுடன் ஒப்பிட்டு கொண்டு இருப்பதை - விழிப்புணர்வுடன் இருந்தால் உணர முடியும்)   நாம் முன்பே இதை பார்த்தது தான்.
அதலால் எதற்காக அன்னப்பறவை வடிவமாக சொல்லப்பட்டது என்று இப்பொழுது உங்களது அறிவு ஆராய்ந்து இருக்கும்.

எதற்காக - தாழம்பூ? - வாசனை மிகுந்த பூ.நாம் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் பல நேரங்களில் நாம் சிந்தனையை /அறிவை இழக்கும் அல்லது மறக்கும் தருணங்கள் உண்டு . எடுத்துக்காட்டாக அழகிய பொருள்களை பார்க்கும் போது, மனதை மயக்கும் மணம்,சுவையான உணவு, இனிமையான இசை.   அப்பொழுது  எல்லாம் நமது அறிவு பகுத்தறியாது. (பகுத்தறிய ஆரம்பித்தால் நமக்கு அதன் அழகோ, மனமோ சுவையோ... உணரமாட்டோம்).  அதனால் ஏற்படும் தீமையை நாம் யோசிக்க மாட்டோம். நமது வாழ்வில் பலநேரங்களில் இது நமக்கு நிகழ்ந்திருக்கும்.
மற்ற பூ இருக்க ஏன் தாழம்பூ?மணம் மிக்க தாழம்பூவில் சிறுநாகம் குடியிருக்கும். பாம்புகள் அந்த மணத்தினால்  ஈர்க்கப்படும்  என்பது நான் கேள்விபட்டது(உண்மையா பொய்யா எனக்கு தெரியாது )
அப்படி இருப்பின்.
யோகா பற்றி தெரிந்தவர்களுக்கு அதன் உண்மை அர்த்தம் தெரியும்(நான் அதை விளக்க போவது இல்லை).
அனைவரும் சிந்திக்க எது உகந்ததோ அதை மட்டும் பார்போம். நம் தேடலில்  அறிவை மறந்து மனம் மயக்கத்தில் இது போல் சென்றால் ஆபத்துகள் உண்டு அதை விளக்குவதாக கொள்ளலாம்.

இதை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் இருப்பினும் இன்னும் இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள நிறைய இருப்பதால் ஒருசில உதாரணங்களுடன் சில விளக்கங்களுடன்  மட்டும் தொடர்வோம்.

விஷ்ணு (செல்வங்களுக்கு அதிபதி )-வராக அவதாரம் எடுத்து கீழ் நோக்கி சென்றது எதற்காக? எல்லா பொருட்செல்வங்களும் பூமியில் இருந்து பெறபடுவது  தான். எல்லாம் பொருட்செல்வங்களும் அழிவதும் பூமியில் தான்.    

வராக அவதாரம் - அதன் சிறப்பு என்ன ?- அது தனது குறிகோளில் எப்பொழுதும் தெளிவாக இருக்கும் அதற்கு எது வேண்டுமோ அதை அடையும்  வரை இடையில் எதுவாக இருந்தாலும் அதன் எண்ணம் எல்லாம் அதன் குறிகோளில் மட்டும் இருக்கும். அதற்க்கு உணவு தேவை எனில் அது மட்டும் தான் அதன் தேடலாக இருக்கும். உணவு பசிக்காகவா  அல்லது ருசிகாகவா எதுவும் அதன் எண்ணத்தில் இருக்காது. எது கிடைத்தாலும் உண்ணும் அதன் குறிக்கோள் உணவு அவ்வளவு தான். பெருக்கம் நிறைய ஏன் அத்தனை தெரியாது குறிக்கோள் பெருக்கம் அவ்வளவே.      

பொருட்செல்வத்தை குறிகோளாக கொண்டு தேடுபவர்களை பாருங்கள் அதன் அர்த்தம் புரியும்.பணம் என்றால் முதலில் அவர்களுக்கு அது மட்டும் இடையில் எதுவந்தாலும். நாலு காசு கிடைக்குதா அப்பறம் மத்ததை  பத்தி எனக்கு கவலை இல்லை எவன் எப்படி இருந்தால் எப்படி போனால் எனகென்ன. இப்படி தான் அவர்கள் எண்ணமெல்லாம் இருக்கும். எத்தனை கிடைத்தாலும் கிடைத்தன்  மதிப்பை உணராமல் ரசிக்காமல், ருசிக்காமல், மேலும் மேலும் போய்கொண்டே இருப்பார்கள் அதன் அருமை அறியாமல்.

போன பதிவில் ஏற்கனவே பார்த்து விட்டோம். ஏன் பிரம்மா தாழம்பூவை சாட்சிக்கு எடுத்துவந்தாரென்று. அதில் இன்னும் கருத்துக்கள் உண்டு. மேலோட்டமாக மட்டும் பார்போம். அவர் முடியை தேடி செல்லும் போது அவரது எண்ணம் எல்லாம் நமக்கு முன் விஷ்ணு சிவனின் அடியை பார்த்திருபாரோ என்ற சந்தேகம், அப்படி பார்த்திருந்தால் நாம் தோற்றுவிடுவோம் என்ற பயம் போன்றவை. ஆதலால் சாட்சிக்கு தாழம்பூ. 

கல்வி அறிவுமிக்கவர்களை பார்த்தல் அதன் பொருள் உங்களுக்கு தெரியும் நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன். படித்தவர்களுக்கு எப்பொழுதும் தனது அறிவில், பயமும் சந்தேகமும் இருக்கும். படிக்காதவனை பாருங்கள் நாம் செய்வதை செய்ய சொன்னால் மிக எளிதாக செய்து விடுவான். நாம எல்லா பக்கமும் எல்லா வகையிலும் யோசிச்சு யோசிச்சு சரியா - தப்பா செய்வோம்.        
மெத்த படித்தவர்களை வீட்டில் அலுவலகத்தில் நிறைய படித்து முடித்த புத்தகங்கள் வைத்து இருப்பார்கள். கேட்டால் reference -க்கு. ஏன் படித்து முடித்தது தானே பிறகு ஏன் ? தனது அறிவில் சந்தேகம், பயம். 

எளிமையாக சொல்லவேண்டுமானால் யார் வீட்டில் மருந்துகள் அதிகமாக இருக்கும்? நோயாளி.. யார் வீட்டில் அதிகமாக புத்தகங்கள் இருக்கும்? - கண்டிப்பாய் அறிவாளியின் வீட்டில் இல்லை.

கதை படி விஷ்ணுவில் இருந்து வந்தவர் பிரம்மா. ஏன் அப்படி? நமது கல்வி எல்லாம் அனுபவத்தின் திரட்டு தான். காக்கும் கடவுள் விஷ்ணு (maintenance God ) வாழ்வின் அனுபவத்தில் இருந்து தான் நமது கல்வி அறிவு, படைக்கும் அறிவு எல்லாம் முதலில் உண்டானது.அதன் பிறகு பிரம்மா அவராகவே பகுத்தறிந்து படைக்க ஆரம்பித்ததின் பொருள்.அதை உணர்த்துவது தான் விஷ்ணுவில் இருந்து பிரம்மா வந்தது  

பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுளாய் இன்னொரு உடலாய் எண்ணும் வரை நம்முடன், நம் அறிவுடன் அவர்களை ஒப்பிட்டு கொண்டு மட்டும் தான் இருக்க தோன்றும்.

எல்லாவற்றிலும் அவர்களை உணரமுடியும். ஒரு நாள், ஒரு பொருள், ஒரு உடல்,நமது உடல்,பிரபஞ்சம் எதுவாகிலும் அதில் அவர்களை உணரமுடியும். 

இன்னும் இந்த பதிவு முடியவில்லை இன்னும் ஆழ்ந்த கருத்துகள் இதில் உண்டு. 
இன்னும் சிவனை பற்றி எதுவும் எழுதவில்லை ?!(இவன் ஒருவேளை சிவனை வழிபடுபவனாக (சைவம் சார்ந்தவனாக) இருப்பானோ ?- ) தொடர்வோம் அது வரை காத்திருங்கள்...

அறிவியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவரின் ஆய்வு முடிவுகள் பற்றி தெரியுமா? கொஞ்சம் அவரின் ஆய்வு முடிவை  நினைவில் கொள்ளுங்கள் எனது அடுத்த பதிவு படிக்கும் போது உதவும்.
   
உங்கள் கருத்துக்கள்,மாற்று கருத்துக்கள், கேள்விகள் எதுவாகிலும் மறுமொழியில் இடுங்கள். அது மற்றவர்களுக்கும் இந்த பதிவை இன்னும் செம்மையாக்க உதவும்.உங்கள் கேள்விகள் ஒவ்வொரு பதிவையும்  மட்டும் சார்ந்து இருந்தால் விளக்க எளிமையாக இருக்கும். நன்றி 
   

Saturday, December 17, 2011

ஆதியில் இருந்து..





ஒரு சிறு முயற்சியாய் முதல் மூலத்தில் இருந்து என்னை தேடலாம்ன்னு ஆரம்பிச்சா ஒரே ஒரு கதை அதை ஆழமா பார்த்தாலே தலை சுத்துது.எல்லாமே அதில் அடங்கிவிடும்  போல இருக்கு. சரி அது என்ன? என் அறிவிற்கு எட்டிய வரையில் உங்களுடன் பகிர்கிறேன்.


நமக்கு தெரிந்த கதை தான். முத்தொழில்களை (படைத்தல் ,காத்தல், அழித்தல்)  செய்யும் கடவுள்கள் கதை தான்.முன்பு படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மா, காத்தல் தொழில் செய்யும் விஷ்ணு இருவருக்கும் இடையே பிரச்சனை நிறைய ஆண்டுகள் நடந்தது. வேற என்ன இருக்க முடியும் யார் பெரியவன்? நீயா? நானா? தான் 

பிரம்மா - நான் படைப்பதால் தான் நீ காக்கிறாய் இல்லாவிடில் காத்தலுக்கு வேலை இல்லை அதனால் நான் தான் பெரியவன்.

விஷ்ணு - நான் காப்பதால் தான் நீ படைக்கிறாய். படைப்பதோடு உன்வேலை முடிந்தது. அதுவும் இல்லாமல் என்னுள்  இருந்து வந்தவன் தான் நீ ஆகையால் நானே பெரியவன். - இப்படியே நிறைய சொல்லிகொண்டே போகலாம். 

நிறைய பேருக்கு இந்த கதை - கதையாய் தெரியும் ஆனால் அதனுள் இருக்கும் ஆழம்?!  முடிந்த வரை பாப்போம். ஆதலால் கதையின்  கருவை மட்டும் பார்ப்போம்.

இவர்கள் இருவருக்கும் சண்டை-அகங்காரத்தினால்*. அங்கு சிவன் (ஆழிக்கும் தொழில்*) செய்யும் கடவுள் அவர்கள் இருவர் முன் ஜோதி பிழம்பாக தோன்றி.  யார் முதலில் அவரின் அடி அல்லது முடியை காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று முடிவெடுக்க முடிவானது.    

பிரம்ம அன்னமாக மாறி சிவனின் முடியை தேடியும். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவரின் அடியை தேடியும் பல ஆண்டுகள் பயணம் செய்தும் அவரின் அடியையோ முடியையோ காண முடியவில்லை. 

விஷ்ணு அவரின் தேடலில் தன் தவறை உணர்ந்து தோல்வியை ஒத்துகொண்டார்.  பிரம்மா தன் தோல்வியை ஒத்துகொள்ளாமல்  மேலிருந்து விழுந்த தாழம்பூவை துணைக்கு அழைத்துக்கொண்டு தான் சிவனின் முடியை கண்டதாகவும் அதற்க்கு சாட்சியாய் தான் இந்த தாலம்பூவை கொண்டுவந்ததாகவும் கூறினார். இது ஒரு கதையாய் பெரும்பாலனவர்களுக்கு தெரியும். சிறுவனாய் இருந்த போது என் பாட்டியும், என் பெற்றோரும் எனக்கு சொன்னது(என் பாட்டி.என்னை பெற்றோர் பற்றி எதுக்கு இப்போ?! அதை பற்றி அப்பறம் சொல்றேன்).

இந்த கதையில் இருந்து எல்லா தேடலுக்கும் பதில் இருக்கிறது கண்டிப்பாய் ஒரு பதிவில் அத்தனையும் சொல்ல முடியாது ஆகையால் ஒவ்வொன்றாய் பார்போம்.

நாம் முதலில் (முதல் பதிவில்) தேடும் கடவுள் அதில் இருந்து என் விளக்கத்தை சொல்ல விளைகிறேன்.

கதை படியே பார்போம்
பிரம்மா யார் ? - படைக்கும் தொழில் செய்பவன். படைப்பதற்கு என்ன எல்லாம் தேவை? அறிவு, கற்பனை திறன், உருவாக்கும் திறன், சிந்தனை எல்லாம் வேண்டும்.  அதை தருவதற்கு கல்வி, அறிவு எல்லாம் வேண்டும். பிரம்மாவின் துணைவி யார்? - சரஸ்வதி தேவி  அவர் - கல்வி, அறிவு கடவுள்.     
அப்படியானால் பிரம்மா கல்வியை தரும்  சரஸ்வதி தேவிக்கே அதிபதி.

விஷ்ணு யார் ? - காக்கும் தொழில் செய்பவன்.படைத்த ஒன்றை  காப்பதற்கு என்ன எல்லாம் வேண்டும்?  செல்வம், வசதிகள், வாய்ப்புகள் போன்றவை.  விஷ்ணுவின் துணை யார்? - லட்சுமி தேவி அவர் - செல்வங்களுக்கு எல்லாம் கடவுள். அப்படியானால் விஷ்ணு செல்வம் தரும் லட்சுமி தேவிக்கே அதிபதி.

சிவன் ? - அழிக்கும் தொழில் - அழிப்பதற்க்கு தேவை சக்தி,ஆற்றல் போன்றவை   - சிவனின் துணைவி பார்வதி தேவி - சிவன் சக்தியின் அதிபதி.

இதில் இருந்து யோசித்து பாருங்கள் - சக்தியாகிய சிவனின் அடியையும் முடியையும் தேடி சென்றவர்கள் யார்?
 பிரம்மா - கல்விக்கு எல்லாம் அதிபதி ,
 விஷ்ணு எல்லா செல்வங்களுக்கும் அதிபதி அவர்களே சக்தியின் அடியையோ முடியையோ பார்க்க முடியவில்லை (இப்போ - நம்ம?????) இதில் சொல்ல வருவது செல்வத்தாலோ, அறிவாலோ கடவுளை பார்க்க முடியாது. அது மட்டும்மா ? நான் ஏற்கனவே சொன்னது போல எல்லா தேடலுக்கும் இந்த தெளிவான கதையில் பதில் இருக்கிறது.

எவ்வளவு தான் செல்வம் சேர்த்தாலும், இருந்தாலும் நம் செல்வத்தேடலில் சிறிது நாட்களில் நமக்கு தடுமாற்றம், நம் தேடல் தவறானது என்ற எண்ணம் வரும்  - அதுவே விஷ்ணுவிற்கு நடந்தது.

நம்ம எல்லாம் அறிவாளிங்க இல்ல. இதோ பிரம்மா - அறிவிற்கு அதிபதி என்ன சொன்னார் பார்க்காத ஒன்றை பார்த்ததாக சொல்ல ஒரு சாட்சியாய் தாளம்பூ. நாம் எப்பொழுதும் செய்வதுதான் தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்க மாட்டோம் அதுக்கு (proof ) ஆதாரம் தேடுவோம் அதுவே அங்கு நடந்தது.

அவ்வளவு தானா ? இன்னும் நிறைய இருக்கு காத்திருங்கள் தொடர்வோம்...

அதுவரை இந்த கதையில் உங்களுக்கு உதிக்கும் எல்லா கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாய் இந்த கதையில் பதில் உள்ளது அவ்வளவு தெளிவான ஆழமான கதை இது. எடுத்துக்காட்டாக ஏன் பிரம்மாமுடியை தேடி போகணும் அடியை தேடி போக கூடாதா? விஷ்ணு ஏன் அடியை தேடி போனார் முடியை தேடி போக வில்லை? உங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள். 

நம் பாரத மண்ணில் நம் முன்னோர்கள் கண்டிப்பாய் நமக்கு சொல்லிச் சென்றவை எல்லாம் மிகவும் ஆழ்ந்த தெளிவான கதைகள் கருத்துகள் தான். நமது கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம் போன்றவை விலை மதிக்க முடியாதவை. மற்ற மதத்திற்கு மாறியவர்களுக்கு இதன் அடிப்படை,நோக்கம் எதுவும் புரியவில்லை, தெரியவில்லை அதனால் தான். நம் நாடு அடிமைப்பட்டு கிடந்த பொது நாம் இழந்தவை மிக அதிகம் அதில் இவை போன்றவை ஏராளம்.

மற்ற மதத்தில் இருந்து இந்திய ஆன்மீகத்தை ஏளனம் பேசும் அனைவருக்கும் தெளிவான பதில் கூற என் தேடலுடன் இந்த பதிவு தொடரும்....  
  
இந்த பதிவை நான் இப்பொழுது தொடங்கி எழுதுவதற்கு காரணம் நண்பர்கள்  தமிழன் மற்றும் ஷன்கர் அவர்களால்  தான். அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.

Thursday, December 1, 2011

ஒரு பயணம்..


முந்தைய பதிவில் பார்த்த கதைக்கும் நமக்கும் என்ன தொடர்பு? நமக்கு எந்த சுரங்கமும் கிடைக்கவில்லை எந்த ஞானியும் நமக்கு சொல்லவில்லை. அப்படி இருக்க இந்த கதையை படித்ததால் என்ன பயன்? கேள்விகள் நியாயம் தான்.

அந்த விறகுவெட்டிக்கு பதில் நம்மை அங்கே பார்போம். பள்ளிபருவம் - தினம் பள்ளிகூடம் நமது சிந்தனை எப்படி இருந்தது? கல்லூரிக்கு சென்றால் சந்தோசமாக இருக்கும். நாம் கல்லூரிக்கு சென்றோம். கல்லூரி சென்றபோது படிப்பு முடிந்தவுடன் நல்ல வேலை கிடைச்சா ரொம்ப சந்தோசாம இருக்கும்.  கல்லூரி முடித்து வேலையும் வாங்கினோம். அப்பொழுதும் நமது எல்லை முடியவில்லை காதல், திருமணம், வீடு, குழந்தைகள், இன்னும் நல்ல வேலை இப்படியே எல்லை இல்லாமல் போய்கொண்டே தான் இருக்கிறது நமது தேவைகள்.இத்தனையும் எதற்காக செய்கிறோம்?. ஒரே ஒரு நிமிடம் கூட யோசிக்க நமக்கு நேரம் இல்லை. சமூகம் அப்படி இருக்கிறது அதை பார்த்து நாமும் அப்படியே.ஐம்புலன்கள் என்ன செய்கிறதோ அதை தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம். ஐம்புலன்களால் முடிந்தவை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வது மட்டும் தான் அவை ஒரு போதும் நமக்கு உணமைகளை உணர்த்தப்போவது  இல்லை.

அதை போலவே நாமும் எல்லையை தேடி ஒப்பிட்டு ஒப்பிட்டு பார்த்து ஓடிகொண்டிருக்கிறோம் அடிப்படை  புரியாமல்/தெரியாமல். ஒரு நிமிடம் யோசிக்கலாம் என்றால் அதற்குள் அடுத்தவர் நம்மை முந்தி சென்றுவிட்டால் அல்லது நேர விரையம் அல்லது போகறவரைக்கும் போகட்டும் அப்பறம் பார்போம் அந்த சிந்தனைகள் மட்டும்.சரி எங்கதான் போறோம் அதுவாவது தெரியுமா? அதுவும் கேள்விகுறியே. இப்போதைக்கு இந்த பிரச்சனைய தீர்த்தா நிம்மதி. இப்படி தான் நம் வாழ்க்கையை ஓட்டிகிட்டு  இருக்கோம். சுலபமா சொல்லகூடிய பதில் lifela செட்டில் ஆகணும் அவ்வளவுதான்  அப்பறம் மத்ததை பார்போம்.எனது அறிவிற்கு எட்டிய வரை lifela செட்டில் ஆகறது ஒண்ணே ஒண்ணுதான் - பிணம். மற்றவை எதுவும் செட்டில் ஆகறமாதிரி தெரியல. உங்களுக்கு அப்படி எதாவது தெரிந்தால் சொல்லுங்க.


பிணம் - உயிர் இல்லா உடல்- நம்மை பொறுத்தவரை உடலின் முடிவு.   பிறப்பில் இருந்து இறப்பு வரை நடப்பவை - வாழ்க்கை என்கிறோம்.

வாழ்வின் தொடக்கத்தை வைத்து அதில் இருந்து தேடிப்பார்ப்போம்.கருவில் உருவாகி பிறந்து,வளர்ந்து, முதுமை எய்தி, இறக்கிறோம். நம் உடல் வளர்ச்சி எதனால் நிகழ்ந்தது? சிறு குழந்தையாய் இருந்தபொழுது நமது அதே உடல் சிறிய அளவில் இப்பொழுது வளர்ந்து விட்டோம். இது எப்படி நிகழ்ந்தது? யாரேனும் நம்மை அப்படி செய்தார்களா?  எத்தனை நிமிடங்கள் யோசித்து இருப்போம்? நம்ம சாப்பிடறோம் அதனால வளர்ச்சி. அப்படி வைத்துகொள்வோமா? அப்படியானால் ஏதோ ஒரு அடித்தளத்தின் மேல் மேலும் மேலும் உணவுகளால் வளர்த்துகொண்டு இருக்கிறோம். கண்ணால் பார்க்கின்ற  வளரும் ஒன்றை நான் (நாம்) என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். அடித்தளம் அல்லது அடிப்படை (base) உணராமல். அடிப்படை /அடிதளத்தினுடன்  உடல் சேர்ந்து நான்(நாம்) என்றிருக்க கூடாதா?

இறப்பு - இறந்த பிறகு இந்த உடலில் செயல்கள் எதுவும் இல்லை. நம்மீது அன்பை பொழிந்தவர்கள் கூட இரண்டு நாட்களுக்கு மேல் நமது உடலை வைத்துகொள்ள விரும்புவது இல்லை. அப்படியானால் இந்த உடலின் உள்ளே ஏதோ ஒன்று இருந்து இந்த உடலை இயக்கிக்கொண்டு உள்ளது. அது என்ன? அது எப்படி இருக்கும் எப்படி பார்ப்பது அல்லது தெரிந்து கொள்வது? ஒருவேளை அதுவே நாம் தேடும் கடவுளாய் இருந்தால்????
" கைல எதையோ வைத்துகொண்டு எதுக்கோ அலைஞ்ச கதை "மாதிரி ஆயிடகூடாதுல. அதனால தான் "நான் யார்?"


இப்படியே பேசிகிட்டு இருந்தா நம்ம சரி/தப்பு இப்படி அறிவை சேர்த்துகிட்டு தான் இருப்போம். ஒரு பயனும் இல்லாத மாதிரி இருக்கு. 
ஒரு பயணம் போவோம்மா? உங்களிடமும் தேடல் இருந்தால் முயற்சித்து பாருங்கள் முழுமனதுடன். என் தேடல் பயணத்தின் ஒரு பகிர்வு. 

http://www.ishafoundation.org/Ishakriya - நன்றிகள் பல 

மேலே உள்ள இணையதளத்தில் உங்கள் பயணம் தொடங்கட்டும் 
முயற்சித்து பாருங்கள். நிச்சயமாய் உங்கள் உள்நோக்கிய பயணம் இனிமையானதாக அமையும். வாழ்த்துக்கள்.


உடம்பார்அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே. - திருமூலர் 

மேலே உள்ள பதிவுக்கும் இந்த வரிகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா ?!  ச்சே.. ச்சே ... நம்ம தேடுவோம்...

இதுவரை என் பதிவுகளில் கடைசியாக இட்ட பாடல் வரிகள் மிகவும் ஆழமான கருத்தை உணர்த்துபவை . அவைகளை சரியான முறையில் விளக்கும் ஞானம் எனக்கில்லை. மன்னிக்கவும்.

Tuesday, November 29, 2011

ஒரு முட்டாள்!


என்னடா இது இன்னும் யாரும் நாம கேட்ட கேள்விக்கு(நான்(நாம்)  யார்?)  பதில் சொல்லவில்லை.ஒருவேளை கஷ்டமான கேள்வி கேட்டுடோமோ? இல்ல நமக்கு சொன்னா புரியாதுன்னு யாரும் சொல்லலையோ? இல்ல யாருக்கும் பதில் தெரியாலையா?நான்னா நான் தான் இதை எப்படி என்னனு சொல்றது?ஏதோ ஒண்ணு நீ என்ன சொல்லணுமோ அதை சொல்லு இருக்கறதை(பிரச்சனையை ) யோசிக்கவே நேரம் இல்ல இதுல வேற நான் யார் அப்படின்னு யோசிச்சு பதில் சொல்லணுமாம்( mind  வாய்ஸ் கேட்குது). ஒரு சின்ன கதையை பார்த்திட்டு அப்பறம் நம்ம ஏன் நம்மை தேடறோம்  பார்போம்.

ஓங்கிய பெரும் காடு... அங்கே...  (ஹிஹி பாட்டு எல்லாம் இல்ல)அந்த காட்டின் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். அவன் நாள்தோறும் காட்டிற்கு சென்று விறகு வெட்டி,விற்று வரும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தான். அவன் காட்டில் நுழையும் முன் ஒரு அரசமரம் இருந்தது. அந்த அரச மரத்தின் நிழலில் ஒரு ஞானி அமர்ந்து இருந்தார். அவர் எல்லா நாட்களிலும் அங்கேயே அமர்ந்து இருப்பார். இவன் தினமும் தன் வேலைக்கு போகும் முன் அவரை வணங்கிவிட்டு போவாது அவன் வழக்கம். தினமும் அவன் வணங்கும் போதெல்லாம் அந்த ஞானி அவனை பார்த்து 'நீ ஒரு முட்டாள்' என்று மட்டும் சொல்வார். வேறு எந்த வாக்கியமோ ஆசிர்வாதமோ  அவர் சொல்லவே இல்லை. ஒவ்வொரு  முறையும் ஆவலுடன் சென்று ஆசி வாங்கும் போதெல்லாம் அவன் கேட்ட ஒரே வாக்கியம் 'நீ ஒரு முட்டாள்'.

ஒரு நாள் நேரடியாகவே அந்த விறகுவெட்டி கேட்டு விட்டான். தினம் என்னை 'நீ ஒரு முட்டாள்' அப்படின்னு சொல்றீங்களே ஏன் அப்படி சொல்றீங்கன்னு கேட்டான்.அதுக்கு அந்த ஞானி இந்த காட்டிற்குள் தினம் சுற்றி கொண்டு தினம் மரம் வெட்டி சென்று விற்று வாழ்க்கை நடத்துற.  இந்த காட்டில் இன்னும் கொஞ்ச தூரம் உள்ள போன அங்க ஒரு செம்பு சுரங்கம் இருக்கு. நீ அந்த செம்பு சுரங்கத்தை பாத்திருந்தா இப்படி தினம் தினம் வரவேண்டியது இல்ல. செம்பு எடுத்துட்டு போய் விற்றால் வாரத்துக்கு ஒரு தடவை வந்தா போதும். அதை பார்க்காம தினம் இப்படி வந்து மரம் வெட்டிகிட்டு இருக்கயே அதனால தான் 'நீ ஒரு முட்டாள்'. 

நமக்கு இந்த காட்டுல எல்லா இடமும் தெரியும் அப்படி இருக்கும் போது எப்படி செம்பு சுரங்கம் இருக்கறது தெரியாம போச்சு இவர் சொல்றதை நம்பறதா வேணாம்மா சரி இன்னும் கொஞ்சம் உள்ள போய் தேடி தான் பார்ப்போமே அப்படின்னு காட்டிற்குள் போய் கொஞ்சம் விழிப்போட தேடினான் . அவர் சொன்ன மாதிரியே ஒரு செம்பு சுரங்கம் இருந்தது. ஒரே சந்தோசம் தான் செம்பு கிடைச்சது. அது போக அவர் ஏன் என்னை முட்டாள் அப்படின்னு சொன்னார்ன்னு இப்போ விளங்கிச்சு. இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா இத்தனை நாள் தினம் வந்து கஷ்டப்பட்டு இருக்கவேண்டியது இல்லல.  

அன்றிலிருந்து வாரம் ஒருமுறை மட்டும் அந்த காட்டிற்கு வந்து செம்பு எடுத்து போய் விற்று வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தான். எப்பொழுதும் போல் காட்டிற்கு உள்ள போகறதுக்கு முன் அந்த ஞானியை பார்த்து வணங்கி விட்டு தான் போனான். அந்த ஞானி 'நீ ஒரு முட்டாள் தான்' சொல்றதை நிறுத்தவே இல்ல. விறகு வெட்டிக்கு குழப்பமா போச்சு நீங்க சொன்ன மாதிரி நான் தான் செம்பு சுரங்கத்தை கண்டு புடுச்சிட்டேனே திரும்பவும் ஏன் "நீ ஒரு முட்டாள் 'ன்னு சொல்றீங்கன்னு கேட்டான்.   

இப்போ அந்த ஞானி விறகு வேட்டியை பார்த்து நீ இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் அங்க வெள்ளி சுரங்கம் இருக்குன்னு சொன்னார்.

அவனுக்கு ஆச்சிரயம்மா இருந்தது. இருந்தும் அந்த ஞானியை பார்த்து வெள்ளி சுரங்கத்தை பத்தி முன்னமே  சொல்லி இருக்கலாம்லன்னு கேட்டான். அதுக்கு ஞானி. நான் செம்பு சுரங்கத்தை பத்தி சொல்லும் போதே நீ நம்பல அப்படி இருக்கும் போது வெள்ளி சுரங்கத்தை பத்தி சொன்னா எப்படி நம்புவ? இப்போ இன்னும் கொஞ்சம் உள்ள போய் தேடி பார். அப்படின்னு சொல்லி அனுப்பினார்.     

எனக்கு பழக்கப்பட்ட காட்டில் ஏதோ செம்பு சுரங்கம் இருக்கறதை வேணா பார்க்காம விட்டிருக்கலாம் அதுக்காக வெள்ளி சுரங்கம் எல்லாம் எப்படி இருக்கும்? கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் கொஞ்சம் நம்பிக்கை உணர்வு அவனிடம் தோன்றி இருந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்ற தேடிய போது வெள்ளி சுரங்கத்தையும் கண்டுபிடித்தான்.

வெள்ளிகளை எடுத்துக்கொண்டு ஞானி இடம் திரும்பி வந்தான். இப்பொழுது நான் மாதம் ஒருமுறை வந்தால் போதும் ஆனால் உங்களை அடிகடி பார்க்க முடியாது உங்களை பிரியறது கஷ்டமா இருக்கு அதுவும் இல்லாமல் நீங்க சொல்ற "நீ ஒரு முட்டாள்' வாக்கியத்தை இனி கேட்க முடியாது. நீங்க சொல்லும் அந்த வாக்கியம் என்னக்கு பிடிச்சு போச்சு.  அதனால் வருத்தமா இருக்குன்னு சொன்னான். அதை கேட்ட ஞானி இப்போவும் நான் அதை தான் சொல்லறேன் 'நீ சர்வ நிச்சயமா முட்டாளே தான்' ன்னு சொன்னார். நான் வெள்ளி சுரங்கத்தை கண்டுபிடிச்ச பிறகுமா நான் முட்டாள்? ஆமாம் சந்தேகமே இல்லாம 'நீ முட்டாள் தான்' இன்னும் கொஞ்சம் உள்ள போனால் அங்க தங்க சுரங்கம் இருக்கு அதனால ஒரு மாதம் கழிச்சு வரவேண்டியது இல்ல நாளைக்கே வா-ன்னு சொல்லி அனுப்பினார்.

இப்போ அவனுக்கு அந்த ஞானி சொல்வதில் சந்தேகம் வந்திடுச்சு. அப்படி தங்க சுரங்கம் இருந்தால் இவர் ஏன் இங்க உட்காந்துகிட்டு இருக்கார் ஒரு வீடு இல்ல, மழைக்கு ஒரு குடை இல்ல, குளிருக்கு ஒரு கம்பளியோ ஒரு போர்வையோ கூட இல்ல,ஒரு நல்ல துணி இல்ல யாரவது வந்து உணவு கொடுத்தா உண்டு  இல்லாட்டி   வாரத்துக்கு ஒருதடவ ஊருக்குள்ள போய் பிச்சை எடுத்து சாப்பிடறார் இவ்வளவு கஷ்டபட்டுட்டு இருக்கார். இவர் கண்டிப்பா நம்மள கேலி பண்றார்ன்னு நினைச்சான். இருந்தாலும் அவர் சொல்றது உண்மையா மட்டும் தான் இருந்திருக்கு. இவரும் வித்தியாசமான ஆளா தான் இருக்கார். அவர் சொல்ற மாதிரி தங்க சுரங்கம் இருந்தால்?யாருக்கு தெரியும். ஒண்ணும் நஷ்டம் இல்ல அதனால தேடி போவோம்ன்னு முடிவு பண்ணினான்.               

அந்த காட்டின் உள்ளே இன்னும் சிறிது தூரம் தேடிச் சென்ற போது அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவர் சொன்னது போலவே ஒரு தங்க சுரங்கம். வாழ் நாள் முழுவதும் இந்த காட்டிலேயே மரம் வெட்டி சுற்றி திரிந்த நமக்கு இந்த தங்க சுரங்கம் பற்றி தெரியவில்லை ஆனால் இந்த காட்டின் ஆரம்பத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் அவருக்கு எப்படி தெரிந்தது. 

ஒரு பை நிறைய தங்கத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தான். இனியாவது 'நீ ஒரு முட்டாள்'ன்னு சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன்னு சொன்னான்.

அதற்கு அவர், “அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவு இல்ல, அதனால் நாளை வா.” என்றார்.  


அவன், “என்னது தங்கம் கிடைத்தது முடிவில்லையா? , ஆரம்பம்தானா! என வியந்தான். அதற்கு அவர், “ஆம், நாளை இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போனால் அங்கே வைரங்கள் இருக்கு. ஆனால் அதுவும் முடிவல்ல,


ஆனால் நான் உனக்கு அதிகப்படியா எதுவும் சொல்லமாட்டேன். ஏன்ன நான் சொல்லிட்டா உன்னால இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை பார்.” என்றார்.

அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் தான்னு சொல்றாரே, வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.



அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். “வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் தூங்கிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா.” என்றார். 


அவன் “வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்.”எனக் கேட்டான். அதற்கு அவர் முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று!இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்றார்.


அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம்,“நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது.” என்றான்.


அவர் சிரித்துக் கொண்டே, “இன்னும் நீ முட்டாள்தான்.” என்றார்.


அவன்,“இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை”என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே இருக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்,” என்றார்.  


அவன் வைரங்களை கீழே போட்டான். “நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை.” என்றான்.   


அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி. தகவல் அறிவுநிரம்பிய(நம்ம தான்)  ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல. 


விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.  


ஞானி அவனை உலுக்கி, “இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்.”என்றார்.  


விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.


அவன் ஞானியைப் பார்த்து, “நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.


அதற்கு அவர். “நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன். காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் ஒவ்வொரு அடியும் ஒரு சென்றடைதல்தான். அதையும் தாண்டி செல்லலாம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த சென்றடைதல் மிகவும் நிறைவானதாக இருக்கும். எனவே சரியான காலம் முக்கியம்” என்றார்.   

  
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ( நம்ம கருத்த சொல்லவேண்டாம்? அதுக்கு தான் ).

'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவவாக்கியர் பாடல்-494


இந்த பாடலுக்கும் மேலே உள்ள கதைக்கும்,நம்ம இதுவரை படித்த இந்த வலை பதிவில் உள்ள பதிவுகளுக்கும்  எதாவது சம்பந்தம் இருக்கா? ச்சே.. ச்சே.. அதை எல்லாம் சம்பந்த படுத்தி யோசிக்க கூடாது. நம்ம தேடுவோம்...     


Monday, November 21, 2011

ஏன் கதைகள்?


சில நாட்களுக்கு முன்பு எனது நண்பரின் வலை  பதிவில் ஒருவர் மறுமொழி இட்டிருந்தார் கற்பனை கதைகளால் தான் ஒரு மதமே உருவானது தங்கள் மதத்தில் கற்பனை கதைகளுக்கே இடமில்லை என்று எதையுமே ஆராயாமல் தனது கற்பனையை மறுமொழியாய்(கதையாய்) எழுதி இருந்தார். அவருக்கு என் நன்றிகள். 

இப்பொழுது தனியாக ஜென் கதைகள் என்ற தலைப்பில் இதை இடுவதற்கு காரணம் நீண்ட தேடலுக்கு பிறகு தோன்றியது.  ( நாங்களும் யோசிப்போம்ள) 

ஏன் கதைகள்?

ஒரு வயதான மனிதர் மிக உயர்ந்த மலை உச்சியில் தனியே வாழ்ந்து வந்தார்.தினமும் காலை வேளையில் அந்த மலையின் உச்சியில் உயரமான செங்குத்தான பாறையின் மீது அமர்ந்து சுற்றியுள்ள மலைகளையும் காடுகளையும் கண்டு ரசிப்பது அவர் வழக்கம் . ஒருநாள் அதே போல  அந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய முற்படுகையில் அந்த கடினமான உயரிய பாறையின் அடிவாரத்தில் எதோ ஒன்று மின்னுவதை கண்டார். வயதானவராய்   இருந்த போதும் அவருடைய கண்களுக்கு அது என்ன என்பதை கணிக்க முடிந்தது. அது ஒரு பெரிய தங்கத்தினால் ஓரங்கள் இளைக்க பட்ட கரிய பேழை. அந்த பாறையின் மீது அமர்ந்து கொண்டே அந்த பேழை எப்படி அங்கு வந்தது?, அதில் என்ன இருக்கும்? என்று யோசிக்க தொடங்கினார்...

நல்ல கதைகளை போல் வேறு எதுவும் நம் கவனத்தை ஈர்க்காது. தொலைக்காட்சி, திரைப்படம் ,வானொலி, புத்தகங்கள் போன்ற எதுவும் இல்லா காலத்தில். முக்கியமாக கதைகள் அவர்களுக்கு கற்பிக்கவும் கேளிக்கைக்கும் உதவியது. இன்று பெரிய நிறுவனங்களில் நிர்வாகிகள் உணவு அருந்துவது போல் குகையில் வாழ்ந்த மனிதர்களுக்கு கதைகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. கதைகள் நம் குருதியுடன் கலந்த ஒன்று. நமக்கு கதாபாத்திரம், நடந்த சூழல்,கதையின் உச்சகட்டம்(கிளைமாக்ஸ்), கதையின் கரு, கதையில் வரும் சிலிரிப்பு (த்ரில்)  கதையில் அவர்கள் அடைந்த துன்பங்கள் வெற்றிகளை ஆழமாக அடுத்தவரை ஈர்க்கும் படி மிகைப்படுத்தி கூறுவதில் நமக்கு அலாதி பிரியம்.எல்லா இலக்கியங்கள் மற்றும் ஊடகங்களின் அடிப்படை நல்ல கதை சொல்வதின் விரிவாக்கமே. கதை சொல்வதின் முக்கியத்துவம் நீங்கள் மற்றவர் முன்னிலையில் சொல்லும்   போது அவர்களை நேரடியாக பார்க்கவும்,  கருத்துகளை கேட்கவும் , அவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவும்  முடியும். கதை சொல்ல அதை கேட்க மற்றவர் தேவை. தனியாக கதை சொல்லிக்கொள்ளவது அல்ல அன்றி நீங்கள் மனநோயாளியாக இல்லா பட்சத்தில்... (அது தனி கதை) .

இங்கே நான் ஜென் கதைகள் எடுத்ததற்கு காரணம்? மனித வரலாற்றில் காலங்கள் கடந்து நிற்கும் அவை மனிதனின் உள்நிலை (insight), ஆன்மிகம்,பிரபஞ்சம் ஆகியவற்றை நமக்கு ஜென் மற்றும் தாவோ(TAO ) கதைகள், உணர்த்தலாம்?!(May  be ). அல்லது பொழுது போக்கிற்கு. சந்தேகம் இன்றி அந்த கதைகள் நமக்கு வாழ்க்கை மற்றும் இறப்பை பற்றிய உண்மைகளை உணர்த்தும்.ஜென் துறவிகள் மலை உச்சியில் தங்கள் மடத்திற்கு மட்டும் என்று இரகசியமாக இல்லாமல் அனைவருக்கும் பயன்படும் படி கூறி சென்றவைகள். நாமும் நம் தேடலில் பயன்படுமா பார்ப்போமே .

ஒவ்வொரு கதையிலும் உங்கள் பார்வை உங்கள் கருத்துகள், நீங்கள் உணர்ந்த அல்லது புரிந்த கொண்டவை மற்றவர்களிடம் இருந்து மாறுபடலாம் அது நம் தேடலில் மறுமொழியாக பதிவு செய்தால் அனைவருக்கும் பயன்படும். நன்றிகளுடன்.

யாருடா இவன் கடவுள்ன்னு ஆரம்பிச்சான், எதுக்குன்னு கேட்டான், நம்ம யாருன்னு கேட்டான் இப்போ கதை சொல்ல போய்ட்டான்னு யோசிக்கறீங்களா? அது விளம்பர இடைவேளை மாதிரி. நம்ம நோக்கம், குறிக்கோள் கடவுளை கண்டுபிடிக்கறது அதில் இருந்து பின் வாங்கறதா இல்லை. எங்க போனாலும் திரும்ப நம்ம தலைப்புக்கு வந்திடுவோம்ல. போன பதிவு கடைசியல் ஏதோ கேட்டேன் நான் என்றால் ஆத்மாவா? இல்ல உயிரா? நான் (நாம்) யார்?  யாராவது எதாவது பதில் சொல்லுவாங்களான்னு காத்து இருக்கேன். அது வரை எதாவது சொல்லணும் இல்ல அதுக்கு தான் ஒரு கதை சொன்னேன்.கொஞ்சம் காத்து இருந்து தான் பார்ப்போமே..    
         
                        


  

Sunday, November 20, 2011

யார் அது?!


கடவுள் தேடலில் நம்ம யார்?, நம்ம கிட்ட என்ன இருக்கு? , நாம எதை வைத்து கடவுளை கண்டுபிடிக்கபோறோம். அந்த தெளிவு இல்லாம எப்படி கடவுளை கண்டு பிடிக்கறது? ஏற்கனவே இருக்கற புலன்கள் மூலமா கடவுளை (இருந்தால் ?!)கண்டுபிடிக்க முடியாதுன்னு ஆய்டுச்சு (பதிவு - என்னை தேடி - கடவுள்!). இப்போ நாம யாருன்னு பார்த்துட்டு அப்பறம் ஒவ்வொன்னா( தகுதி இருக்கா, பாஸ்போர்ட் இருக்கா, விசா இருக்கா, இல்லாட்டி அது எல்லாம் இல்லாம  வேற எதாவது வழி இருக்கா பாப்போம் ) மொதல்ல நம்ம யாரு கொஞ்சம் தேடித்தான் பார்ப்போமே.

நாம (நான்)  யார்? - மனி...தன் (ரஜினி ஸ்டைல பதில் வருது) (நாய்க்கு தெரியுமா  நாயோட பேரு நாய்ன்னு?? ஆகா என்ன ஒரு சிந்தனை?).நம்மலா சொல்லிக்கறோம் மனிதன்னு அனால் அது நாம(நான்) இல்ல(ஹிஹி கோபம் வேண்டாம் ) நம்ம ஜனங்க எல்லாருக்கும் நாம பயன்படுத்தும் (மனிதன்/மனிதர்கள் ) பொது பெயர். நம்மலா வச்சுகிட்டது. உண்மையில் அது நான்/நாம் இல்லை . ஒரு பெயர் அவ்வளவே.இப்படி எல்லாம் இருந்தால் அவன் மனிதன் (collective qualities ) சேர்த்த ஒரு வார்த்தை அவ்வளவே.அது நான் இல்லை .

அப்ப நான் (நாம்) யார் ?
(என்னுடைய  பெயர் ) நான் பிரபு..(நாய்க்கு பெயர் முத்துமாலை) நீங்க? (ஏதோ ஒரு பெயர் சொல்வீங்க)- அது தான் நாமலா? அதுவும் பெயரே அடையாளத்துக்கு கூப்பிட. அந்த பெயர் தான் நாமா? இல்ல பின்ன நாம யார்?அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
என்னுடைய தொழில் (நாய்க்கு வேலை இல்ல உட்கார நேரம் இல்ல)நான் கணினி வல்லுனன் ,டாக்டர், வக்கீல், சிப்பாய், மந்திரி, வாத்தியார்  என்ன வேணாலும் சொல்லிக்குங்க அது எல்லாம் நாமா? அது எல்லாம் நாம் செய்யும் தொழில்.அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
நான் இந்தியன், நான் மலேசியன், நான் இந்த நாட்டை சேர்ந்தவன்.. அதுவும் என்னுடைய நாட்டை சார்ந்த பெயர்.அது நான் இல்லை .

நான் (நாம்) யார்?
நான் ஹிந்து, புத்திஸ்ட்,  சீக்கியன் , ஜைனமதம், வேற என்ன மதம் வேணாலும் சொல்லிக்  கொள்ளுங்கள்  அது என்னுடைய மதம் சார்ந்த பெயர். அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
நான் இன்னார் மகன்/மகள்  , இன்னார் தந்தை/தாய் , இன்னார் பேரன்/பேத்தி, இன்னார் இன்னார் எல்லாம் என்னுடைய உறவுகள் சார்ந்த பெயர்.அது நான் இல்லை .

நான்(நாம்) யார்?
என்ன என்னவோ சொல்லி பார்த்தாச்சு எல்லாம் என்னை சார்ந்து தான் வருது அப்ப நான்(நாம்) யார்?

(ஏன்? ஏன்? ஏன் இப்படி படுத்தற? நேரா விசயத்துக்கு வா - mind வாய்ஸ் கேட்குது)  கொஞ்சம் பொறுத்துக்குங்க வேற வழி இல்ல.


நான்(நாம்) யார்?
ஆங்...! கண்டு புடிச்சிட்டேன் - இந்த உடல் தான் நான் (எப்புடி?).இல்ல அங்கேயும் இடிக்குதே..சொல்லும் போது என் உடல், பொருள், ஆவி(இட்லி வேகவைக்கறதா?)  இது என் உடல் அப்படி தானே சொல்ல வருது.என் கண், என் கை, என் கால், என் உடம்பு. அப்ப அதுவும் நான் இல்ல. என்னை சார்ந்த பொருள் எல்லாம் எப்படி நான் ஆகா முடியும்?
எங்கயோ ஒரு அசிரிரி கேட்குதே   (சார்/மேடம் நீங்களா சொன்னது?) ...மடையா நாமா தான் ஆத்மா,உயிர். அதுவா அதற்க்கு விடை அல்லது முடிவு ?! கண்டிப்பாக?! நிச்சயமாக?! உறுதியாக?! நான் அப்படின்னு சொல்றது நம்ம ஆத்மாவை தான். அப்படியா?  முடிவிற்கு வந்திரலாமா? கண்டிப்பா காட்டுங்க அப்ப தான் உறுதி எல்லாம் சொல்ல மாட்டேன். அது தான் ஏற்கனவே நாட்டமை தீர்ப்பு இருக்கே. ஆகையால் தைரியம்மா சொல்லுங்க ஆத்மா தான் நாமா?  ஏன் தயக்கம்... ? சொல்லுங்க...நான் காத்திருக்கேன் தேடலுடன்...


'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே! ' 


இந்த வரிகளும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு இல்ல? ச்சே.. ச்சே.. அதை எல்லாம் நாம பார்க்கபடாது. நம்ம யாரு?!  தேடுவோம் விடறதா இல்ல...