Sunday, November 20, 2011

யார் அது?!


கடவுள் தேடலில் நம்ம யார்?, நம்ம கிட்ட என்ன இருக்கு? , நாம எதை வைத்து கடவுளை கண்டுபிடிக்கபோறோம். அந்த தெளிவு இல்லாம எப்படி கடவுளை கண்டு பிடிக்கறது? ஏற்கனவே இருக்கற புலன்கள் மூலமா கடவுளை (இருந்தால் ?!)கண்டுபிடிக்க முடியாதுன்னு ஆய்டுச்சு (பதிவு - என்னை தேடி - கடவுள்!). இப்போ நாம யாருன்னு பார்த்துட்டு அப்பறம் ஒவ்வொன்னா( தகுதி இருக்கா, பாஸ்போர்ட் இருக்கா, விசா இருக்கா, இல்லாட்டி அது எல்லாம் இல்லாம  வேற எதாவது வழி இருக்கா பாப்போம் ) மொதல்ல நம்ம யாரு கொஞ்சம் தேடித்தான் பார்ப்போமே.

நாம (நான்)  யார்? - மனி...தன் (ரஜினி ஸ்டைல பதில் வருது) (நாய்க்கு தெரியுமா  நாயோட பேரு நாய்ன்னு?? ஆகா என்ன ஒரு சிந்தனை?).நம்மலா சொல்லிக்கறோம் மனிதன்னு அனால் அது நாம(நான்) இல்ல(ஹிஹி கோபம் வேண்டாம் ) நம்ம ஜனங்க எல்லாருக்கும் நாம பயன்படுத்தும் (மனிதன்/மனிதர்கள் ) பொது பெயர். நம்மலா வச்சுகிட்டது. உண்மையில் அது நான்/நாம் இல்லை . ஒரு பெயர் அவ்வளவே.இப்படி எல்லாம் இருந்தால் அவன் மனிதன் (collective qualities ) சேர்த்த ஒரு வார்த்தை அவ்வளவே.அது நான் இல்லை .

அப்ப நான் (நாம்) யார் ?
(என்னுடைய  பெயர் ) நான் பிரபு..(நாய்க்கு பெயர் முத்துமாலை) நீங்க? (ஏதோ ஒரு பெயர் சொல்வீங்க)- அது தான் நாமலா? அதுவும் பெயரே அடையாளத்துக்கு கூப்பிட. அந்த பெயர் தான் நாமா? இல்ல பின்ன நாம யார்?அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
என்னுடைய தொழில் (நாய்க்கு வேலை இல்ல உட்கார நேரம் இல்ல)நான் கணினி வல்லுனன் ,டாக்டர், வக்கீல், சிப்பாய், மந்திரி, வாத்தியார்  என்ன வேணாலும் சொல்லிக்குங்க அது எல்லாம் நாமா? அது எல்லாம் நாம் செய்யும் தொழில்.அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
நான் இந்தியன், நான் மலேசியன், நான் இந்த நாட்டை சேர்ந்தவன்.. அதுவும் என்னுடைய நாட்டை சார்ந்த பெயர்.அது நான் இல்லை .

நான் (நாம்) யார்?
நான் ஹிந்து, புத்திஸ்ட்,  சீக்கியன் , ஜைனமதம், வேற என்ன மதம் வேணாலும் சொல்லிக்  கொள்ளுங்கள்  அது என்னுடைய மதம் சார்ந்த பெயர். அது நான் இல்லை .

நான் (நாம்) யார் ?
நான் இன்னார் மகன்/மகள்  , இன்னார் தந்தை/தாய் , இன்னார் பேரன்/பேத்தி, இன்னார் இன்னார் எல்லாம் என்னுடைய உறவுகள் சார்ந்த பெயர்.அது நான் இல்லை .

நான்(நாம்) யார்?
என்ன என்னவோ சொல்லி பார்த்தாச்சு எல்லாம் என்னை சார்ந்து தான் வருது அப்ப நான்(நாம்) யார்?

(ஏன்? ஏன்? ஏன் இப்படி படுத்தற? நேரா விசயத்துக்கு வா - mind வாய்ஸ் கேட்குது)  கொஞ்சம் பொறுத்துக்குங்க வேற வழி இல்ல.


நான்(நாம்) யார்?
ஆங்...! கண்டு புடிச்சிட்டேன் - இந்த உடல் தான் நான் (எப்புடி?).இல்ல அங்கேயும் இடிக்குதே..சொல்லும் போது என் உடல், பொருள், ஆவி(இட்லி வேகவைக்கறதா?)  இது என் உடல் அப்படி தானே சொல்ல வருது.என் கண், என் கை, என் கால், என் உடம்பு. அப்ப அதுவும் நான் இல்ல. என்னை சார்ந்த பொருள் எல்லாம் எப்படி நான் ஆகா முடியும்?
எங்கயோ ஒரு அசிரிரி கேட்குதே   (சார்/மேடம் நீங்களா சொன்னது?) ...மடையா நாமா தான் ஆத்மா,உயிர். அதுவா அதற்க்கு விடை அல்லது முடிவு ?! கண்டிப்பாக?! நிச்சயமாக?! உறுதியாக?! நான் அப்படின்னு சொல்றது நம்ம ஆத்மாவை தான். அப்படியா?  முடிவிற்கு வந்திரலாமா? கண்டிப்பா காட்டுங்க அப்ப தான் உறுதி எல்லாம் சொல்ல மாட்டேன். அது தான் ஏற்கனவே நாட்டமை தீர்ப்பு இருக்கே. ஆகையால் தைரியம்மா சொல்லுங்க ஆத்மா தான் நாமா?  ஏன் தயக்கம்... ? சொல்லுங்க...நான் காத்திருக்கேன் தேடலுடன்...


'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே! ' 


இந்த வரிகளும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு இல்ல? ச்சே.. ச்சே.. அதை எல்லாம் நாம பார்க்கபடாது. நம்ம யாரு?!  தேடுவோம் விடறதா இல்ல...
        

No comments:

Post a Comment